1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (16:52 IST)

4 ஆண்டுகளில் 9 முறை பரோல்.. ஜாலி வாழ்க்கை வாழும் பாலியல் குற்றவாளி சாமியார்!

Ram Rahim singh
பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சாமியார் குருமீத் ராம் ரஹிம் சிங்கிற்கு 9வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



தேரா சச்சா சவுதா என்ற அமைப்பை தொடங்கி நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆசிரமங்களை நடத்தி வந்தவர் குருமீத் ராம் ரஹிம் சிங் ஜி இன்சான். இவருக்கு திருமணமாகி 4 மகன்கள் உள்ளனர். இவர் தனது ஆசிரமத்தின் மூலம் பெரும் புகழ் அடைந்ததோடு இவரே தயாரித்து சில படங்களும் ஹீரோவாக நடித்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக பெண் சிஷ்யைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற இவர் அவ்வபோது பரோலில் வெளியே வந்து ஜாலியாக கிரிக்கெட் விளையாடி சுற்றி திரிவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நான்கு ஆண்டுகளில் மீண்டும் 9வது முறையாக அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K