1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

கிரிக்கெட்டில் சதமடிக்காத குறையை பெட்ரோல் போக்கியுள்ளது… ப சிதம்பரம் நக்கல்!

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைவாக உள்ள நிலையிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது.

இதை முன்னிட்டு முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘உலக கோப்பை இறுதி போட்டியில் வீரர்கள் யாரும் சதமடிக்க வில்லையே என்ற குறையை பெட்ரோல் விலை போக்கியுள்ளது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் 75 டாலர்களாக உள்ள நிலையில் விலை உயர்ந்திருப்பதற்குக் காரணம் வரிக் கொள்கை அல்ல வரிக்கொள்ளைதான்’ எனக் கூறியுள்ளார்.