1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (19:31 IST)

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி!

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று என்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இங்கிலாந்து உள்பட ஒருசில நாடுகளில் இருந்து கேரளா வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரளாவிலும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கேரளாவில் ஒரே நாளில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட தகவல் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.