வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (09:17 IST)

நடைபாதையில் தூக்கு மாட்டி தற்கொலை: பட்டப்பகலில் நடந்த சோகம்!

நடைபாதையில் தூக்கு மாட்டி தற்கொலை: பட்டப்பகலில் நடந்த சோகம்!

மும்பையில் பட்டப்பகலில் நடைபாதை ஒன்றில் அதன் அருகில் உள்ள மரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 
 
மும்பையில் ஏர் இந்தியா பில்டிங் உள்ள அந்த பரபரப்பான சாலையில் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் அந்த சாலையின் எதிரே உள்ள நடைபாதையில் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
 
ஒருவர் நடைபாதையில் தூக்கில் தொங்கினாலும் அந்த பகுதியை கடந்து செல்லும் எந்த நபரும் அதை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர் என ஒரு நபர் காவல்துறைக்கு நேற்று மதியம் தகவல் அளித்துள்ளார்.
 
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தூக்கில் தொங்கிய உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்டவர் சாலையோரம் வசிக்கும் நபராக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அந்த நபர் யார் என்ற விபரம் இன்னமும் தெரியவில்லை.