1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 24 ஜூன் 2015 (19:01 IST)

மகாராஷ்டிரா அமைச்சர் மீது ரூ.200 கோடி ஊழல் புகார்: பாஜகவுக்கு அடுத்த சிக்கல்!

மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பங்கஜா முண்டே மீது ரூ.200 கோடி ஊழல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
 

 
அமலாக்கத் துறையால் தேடப்பட்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவியதாக எழுந்துள்ள புகாரில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் சிக்கலை எதிர்கொண்டு வரும் பாஜகவுக்கு, தற்போது மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக உள்ள பங்கஜா முண்டே, தனது துறையில் விதிகளை மீறி ரூபாய் 200 கோடி மதிப்புள்ள பொருட்களை கொள்முதல் செய்ததாக  காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
 
இதனால் பாஜகவுக்கு சிக்கல் மேல் சிக்கல் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.