1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Lenin
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (15:13 IST)

மகாராஷ்டிரா தேர்தல்: பாஜகவிற்கு 130 இடங்கள் ஒதுக்க சிவசேனா ஒப்புதல்

செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 130 இடங்களை பாஜகவிற்கு வழங்க சிவசேனா ஒப்புக்கொண்டுள்ளது.
 
இது குறித்து இரு கட்சிகளிடையே நடந்த பேச்சு வார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
 
மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 130 தொகுதிகள் பாஜகவும், 135 தொகுதிகள் சிவசேனாவும், மீதமுள்ள தொகுதிகளில் இதர கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.