1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (09:07 IST)

காங்கிரஸ்காரங்க பாகிஸ்தான் செய்தி தொடர்பாளரா ஆயிட்டாங்க! – ஜே.பி.நட்டா ஆவேசம்!

புல்வாமா தாக்குதல் குறித்து ராகுல் காந்தி பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பாஜக தலைவர் ஜே.பி நட்டா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைப்பகுதியான புல்வாமாவில் குண்டு வெடித்து சிஆர்பிஎஃப் வீரர்கள் இறந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் எழுந்தபோது எம்.பி ஒருவர் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என பேசியுள்ளார்.

முன்னதாக புல்வாமா தாக்குதல் பற்றி பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, புல்வாமா தாக்குதல் குறித்தும் அரசின் நடவடிக்கை குறித்தும் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்நிலையில் பேசியுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ”புல்வாமா தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என பாகிஸ்தான் நாட்டு மந்திரியே சமீபத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பாகிஸ்தானுக்கே செய்தி தொடர்பாளராக மாறி விட்டனர்” என தெரிவித்துள்ளார்.