போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் இன்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்து மீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட கிரன் செக்டார் பகுதியில் இன்று காலை 8.20 மணியிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள சூழலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி இருப்பது எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.