1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (09:47 IST)

50,000-த்தை நெருங்கிய பாதிப்பு - இன்றைய கொரோனா நிலவரம் என்ன?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல குறைந்து வந்த கொரொனா தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,084 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,30,101 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 6 மற்றும் 12 ஆம் தேதிக்கு இடையில் இந்தியாவில் சுமார் 49,000 புதிய கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் புதிதாக 10 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,771 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 4,592 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,57,335ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 47,995 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,95,19,81,150 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,77,146 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.