1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (12:09 IST)

பிரிட்ஜில் வைக்கப்பட்ட மனித மாமிசம்: நரபலி வழக்கில் பகீர்!

பகவல் சிங்கின் வீட்டில் சில இடங்களிலும், பிரிட்ஜிலும் ரத்தக்கறைகள் காணப்பட்டன என  தகவல்.


பணம், செல்வம் குவிய வேண்டுமென கேரள தம்பதி இருவர் மந்திரவாதி ஒருவருடன் சேர்ந்து பெண்களை நரபலி கொடுத்து, அந்த மனித கறியையும் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளான பகவந்த் என்னும் பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் மந்திரவாதி முகமது ஷபி ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் சில திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வந்துள்ளன.

முக்கியமாக நரபலிக்கு பெண்களை ஆசைக்காட்டி மயக்கி அழைத்து வந்த மந்திரவாதி முகமது ஷபி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். மந்திரவாதி ஷபி குறித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து விசாரணையின் பகுதியாக நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பகவல் சிங்கின் வீட்டுக்கு 3 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கொச்சி போலீஸ் துணை கமிஷனர் சசிதரன் முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பகவல் சிங்கின் வீட்டில் சில இடங்களிலும், பிரிட்ஜிலும் ரத்தக்கறைகள் காணப்பட்டன. இதுபற்றி போலீசார் அவர்களிடம் கேட்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. 2 பெண்களை நரபலி கொடுத்த பின்னர் அவர்களது உடல்களை 56 துண்டுகளாக வெட்டிய மந்திரவாதி உள்பட 3 பேரும் அதனை வீட்டின் பிரிட்ஜில் வைத்துள்ளனர் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Edited By: Sugapriya Prakash