தொடர்புடைய செய்திகள்
- செங்கோட்டையனை அடுத்து டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன்.. என்ன காரணம்?
- விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு உள்ளது என்பது உண்மைதான்.. ஆனால் விஜய்யுடன் கூட்டணி இல்லை: அண்ணாமலை
- 2029ல் ராகுல் காந்தி நிச்சயம் பிரதமர் ஆவார்.. துணை முதல்வர் நம்பிக்கை..!
- டெல்லியில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு: மன நிம்மதிக்காக போவதாக சொன்னாரே?
- குடியரசு தலைவர் தேர்தல்.. சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி? 391 உறுப்பினர் ஆதரவு தேவை..
Go Back Rahul.. உபியில் ராகுல் காந்திக்கு எதிராக திடீர் போராட்டம்..!
இரண்டு நாள் பயணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதிக்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, 'கோ பேக் ராகுல்' என்ற போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தேசிய நெடுஞ்சாலையில், உத்தரப்பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் தலைமையில் பாஜக தொண்டர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர். ராகுல் காந்தி அந்த வழியாக வந்தபோது, 'ராகுல் காந்தி கோ பேக்' என்று கோஷமிட்டு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்கள் கூட இதனால் மறைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பாஜகவினர் தங்கள் போராட்டத்திற்கான இரண்டு முக்கியக் காரணங்களை முன்வைத்தனர். முதலாவது, ராகுல் காந்தி வாக்குத்திருட்டு குறித்து மத்திய அரசின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. இரண்டாவது, பிரதமர் மோடியின் தாயார் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பது. இந்த இரு காரணங்களுக்காகவே ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
Edited by Mahendran
