வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (03:53 IST)

கேரளாவில் இருந்து 282 பேருடன் துபாய் சென்ற விமானத்தில் தீ [வீடியோ]

282 பயணிகளுடன் இந்தியாவின் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது.
 

 
துபாய் நாட்டின் பயணிகள் விமானமான EK521 என்ற விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. அந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் பயணித்தனர். 
 
அந்த விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, முன்பக்க சக்கரம் உடைந்ததால் நிலை தடுமாறி, விமானத்தின் வால் பகுதி முதலில் தரையை தட்டியது.
 
இதனால், அதன் வலது பக்க என்ஜின் ஓடுதளத்தில் மோதி தீப்பிடித்தது. இதனால், அப்பகுதி எங்கும் புகை மண்டலம் சூழ்ந்தது. உடனடியாக பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், பயணிகளின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

வீடியோ இங்கே: