சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : திங்கள், 6 மார்ச் 2017 (05:15 IST)

அதிகாலையில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம். குஜராத் மக்கள் அச்சம்

குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 முறை அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்




ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கட்ச் மாவட்டம் ராபார் பகுதியில் இருந்து 17 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதை புவியியல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கட்ச் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாகவும்,. இருப்பினும் எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கட்ச் கலெக்டர் அறிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 2.45 மணிக்கு கட்ச் பகுதியில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவுஇம், அதன் பின்னர் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில்  உறைந்து போயுள்ளனர்