1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (09:02 IST)

பேச்சுவார்த்தையில் தோல்வி: டெல்லி நோக்கி செல்கிறது விவசாயிகள் பேரணி..!

மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி இன்று செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயிர்களுக்கு MSP-ஐ உறுதி செய்ய புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேரணி இன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் விவசாயிகள் பேரணியை தடுக்க மத்திய அமைச்சர்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில்  உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று  டெல்லியில் நுழைகின்றன

விவசாயிகளை தடுக்க தரையில் ஆணிகளை பதித்து, சிமெண்ட்      தடுப்புகளை டெல்லி போலீஸ் வைத்துள்ள நிலையில் தடையை மீறி விவசாயிகள் பேரணி செல்லுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva