1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (15:58 IST)

கோவிஷீல்டு மருந்து ரூ.1,000க்கு விற்பனை: விலை உயர்த்திய சீரம்!

வெளிச்சந்தையில் கோவிஷீல்டு மருந்து ரூ.1,000க்கு விற்பனை செய்யப்படும் என தகவல். 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
 
விரைவில் அனைத்து மக்களுக்கும் இந்த தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்ட நிலையில் மத்திய அரசுக்கு இந்த தடுப்பூசியை ரூ.200க்கு சலுகை விலையில் தர சீரம் நிறுவனம் அறிவித்தது.
 
இந்தியாவில் முதல் 10 கோடி கோவிஷீல்டு மருந்துகளுக்கு மட்டுமே தலா ரூ.200 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெளிச்சந்தையில் கோவிஷீல்டு மருந்து ரூ.1,000க்கு விற்பனை செய்யப்படும் என சீரம் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.