1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (22:40 IST)

இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதி!

இந்திய ஒலிம்பிக் சங்கச் செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டதற்கு சுப்ரீம் கோர்டு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், வரும்  டிசம்பர் 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில்  நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் செய்யலாம் என்றும், இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்குத் தேர்தல் நடத்த  முடிவு செய்யப்பட்டது.

இந்த தேர்தல் குறித்த கால அளவுக்கு டிசம்பர் 10 ஆம் தேதி நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்டு  ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கான செயற்குழு வாரிய கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இதற்குள்  இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல்  நடத்த வேண்டும் என்பதால், டிசம்பர் 3 ஆம் தேதி இத்தேர்தல் நடத்த ஒப்புதல் அளிக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.