1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 22 ஜூன் 2017 (22:43 IST)

கற்பழிப்பு புகார் கொடுக்க சென்ற பெண்ணை படுக்கைக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவரை சமீபத்தில் இரண்டு மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்க அவர் காவல்நிலையம் சென்றபோது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.



 


புகார் கொடுக்க சென்ற தன்னை சப்-இன்ஸ்பெக்டர் படுக்கைக்கு அழைத்ததை தான் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், இதுகுறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்யவுள்ளதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்

ஆனால் அவருடைய வீடியோவை பார்த்த எஸ்பி அலுவலக அதிகாரிகள் அந்த வீடியோவில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் குரல், வீடியோவில் இருந்த குரலுடன் ஒத்து போகவில்லை என்றும், இருப்பினும் அந்த பெண்ணின் புகார் மீது விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏறட்டுள்ளது.