வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (07:43 IST)

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்!

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன் கள பணியாளர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டம் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன்படி 50 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த காப்பீட்டு திட்டம் முடிய உள்ள நிலையில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.