1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 25 மே 2016 (15:36 IST)

ராஜ்யசபா வேட்பாளர்: வைத்தியலிங்கம் - எஸ்.ஆர்.பி உள்ளிட்ட 4 பேர் அதிமுகவில் அறிவிப்பு

ராஜ்யசபா வேட்பாளர்: வைத்தியலிங்கம் - எஸ்.ஆர்.பி உள்ளிட்ட 4 பேர் அதிமுகவில் அறிவிப்பு

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்களை இன்று முறைப்படி அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
 

 
வரும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 15 மாநிலங்களில் 57 எம்பிக்களின் பதவி காலம் முடிவடைய உள்ளது.
 
இதில், தமிழகத்தில் அதிமுக சார்பில், நவநீதி கிருஷ்ணன், ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் சுதர்சன நாச்சியப்பன், திமுக சார்பில் கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு ஆகியோர்  பதவி காலம் முடிவடைய உள்ளது.
 
இந்த நிலையில், ராஜ்யசபாவில் நான்கு பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வைத்தியலிங்கம், தாமகாவில் இருந்து வெளியேறிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் ஆஜரான வழக்றிஞர் நவநீதகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஏ.விஜயகுமார் ஆகியோரை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.