வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (11:36 IST)

4 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மட் கட்டாயம்

4 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது.


 

 
இந்தியாவில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இளம் வயதினர் அதிக அளவில் சாலை விபத்துகளை ஏற்படுத்துவதால் அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யும் சட்டத்தையும் திருத்தி எழுத முடிவு செய்திருந்தது.
 
இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 4 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும். மீறினால் ரூ:3000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமத்துக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க வேண்டும். இந்த மசோதாவை நிதின் கட்காரி தாக்கல் செய்து, சாலை போக்குவரத்து மசோதாவை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றார்.
 
4 வயதுக்கு மேல், ஹெல்மட், கட்டாயம், Above 4 year, Helmet,
 
Above 4 Year all must wear Helmet       4 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஹெல்மட் கட்டாயம்
 
4 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
 
இந்தியாவில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இளம் வயதினர் அதிக அளவில் சாலை விபத்துகளை ஏற்படுத்துவதால் அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யும் சட்டத்தையும் திருத்தி எழுத முடிவு செய்திருந்தது.
 
இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 4 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும். மீறினால் ரூ:3000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமத்துக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க வேண்டும். இந்த மசோதாவை நிதின் கட்காரி தாக்கல் செய்து, சாலை போக்குவரத்து மசோதாவை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றார்.