1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (18:52 IST)

பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் தீ வைத்து எரித்துக் கொலை

Fire
மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஒரு பழங்ககுடியின குடும்பத்திற்கு என நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன், குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதைச் சேர்ந்த பெண் தன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், 3 பேர் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ராம்பியாரி சஹாரியா அவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த 3 பேர், ராம்பியாரி சஹாரியாவை அவரது வயலில் தீ வைத்து எரித்த்துள்ளனர்.

அப்பெண் வலியால் துடித்தடித்தபோது, அவர்கள்  மூவரும் அதை வீடியோ எடுத்துள்ளனர். தற்போது  3  பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீஸார் தேடி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.