ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (00:25 IST)

8 பேர் உயிருடன் எரித்துக் கொலை…வன்முறை பகுதிக்குச் செல்லும் முதல்வர் !

மேற்கு வங்கத்தில்   8  பேர் உயிரிடன் கொலை செய்யப்பட்ட பகுதிக்குச் நேரடியாக  நாளை சென்று பார்வையிடவுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க   மா நிலம் பிர்மம் மாவட்டத்தில் திரினாமுல் காங். ,  கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் துணைத்தலைவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.

இதனால் அக்கட்சியில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில், 8 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வன்முறை நடந்த கிராமத்திற்கு நாளை நேரில் சென்று பார்வையிடவுள்ளார் முதல்வர் மம்தா.