1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (21:05 IST)

மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது என்பதும் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்தாலும் பலரும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மதிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த சோரியாங்குப்பத்தில் விநாயகம் என்பவரது மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என தெரிய வந்துள்ளது.
 
இதனையடுத்து புதுவை மாநில சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாமிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.