வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (15:09 IST)

பிரச்சார மேடையில் சேர், செருப்பு வீச்சு , அடிதடி : 3 பேர் காயம்

பெரியார் வளர்த்த கட்சி திராவிட இயக்கம். இன்று இக்கட்சியை கீ.வீரமணி வழிநடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை இந்து மதக் கடவுளுடன் தொடர்புபடுத்தி கட்சி மேடையில் பேசியதாக இந்து மத ஆதரவாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி தாராநல்லூரில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்குள் புகுந்த இந்து முன்னணியினர் திடீரென்று வன்முறையில் ஈடுப்பட்டனர்.
 
அப்போது திராவிட கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் போஜராஜன்  மணிகண்டன் உள்பட மொத்தம் 12 பேர் கொண்ட கும்பல் மேடையின் மீது செருப்பை வீசி பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து இருதரப்பினரும் மோதல் ஏற்பட்டது.  இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.