ஸ்ரீ மஹாலஷ்மியை தோத்திரம் செய்வதன் மூலம் சர்வ கார்ய ஸித்திகள்
ஸ்ரீ மஹா லஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து வருபவர்கள் அநேகம் பேர். அவளுக்குரிய சில பவித்திரமான மந்திரங்களை ஜபிப்பதன் மூலமாக -அவளுடைய அருளை, அவளை ஆராதிப்பவர்கள் அடையலாம்.அத்துடன் சகல கார்யங்களிலும் சகல விதமான சித்திகளையும் அடையலாம்.இவ்வாறு சித்தி பெறுவதற்குரிய மந்திர மார்க்கங்களை அனுசரித்து எப்படிப் பலன் பெறலாம் என்பதைக் காணலாம்.1.
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைவதற்கு . . .கீழ் வரும் மந்திரத்தினைத் தினந்தோறும் காலையில் எழுந்து -இருபத்து ஏழு தடவை ஜபம் செய்யவும்.மந்திரம் :மஹா லக்ஷ்மீர் மஹாகாளீ மஹாகந்யா ஸரஸ்வதீபோக வைபவ ஸந்தாத்ரீ பக்தானுக்ரஹ காரிணீ2.
எல்லாவிதப் பயங்களும் ஒழிய . . .கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் மாலையில் பனிரெண்டு தடவை ஜபம் செய்யவும்.மந்திரம் :பத்ரகாளீ கராளீ ச மஹாகாளீ திலோத்தமாகாளீ கராள வக்த்ராந்தா காமாக்ஷீ காமதா ஸுபா3.
ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய எண்ணும் போது,அதில் வெற்றி கிட்ட வேண்டும் என்றால் . . .கீழ் வரும் மந்திரத்தைத் தாங்கள் எந்தக் காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினார்களோ -அந்தக் காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தினந்தோறும் பத்துத் தடவை ஜபம் செய்து வரவும்.மந்திரம் :ஜயா ச விஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதாகுப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ வீணா புஸ்தக தாரிணீ4.
எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட . . .கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பதினெட்டுத் தடவை. தினந்தோறும் ஜபிக்கவும்.மந்திரம் :பிப்பலா ச விஸாலாக்ஷீ ரன்க்ஷக்க்நீ வ்ருஷ்டி காரிணீதுஷ்ட வித்ராவிணீ தேவீ ஸர்வோபத்ரவ நாஸிநீ5.
கல்வியில் வல்லமை பெற . . .கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பனிரெண்டு தடவை ஜபிக்கவும்.மந்திரம் :அர்த்த நாரீஸ்வரி தேவீ ஸர்வ வித்யா ப்ரதாயிநீபார்கவீ பூஜுஷீ வித்யா ஸர்வோபநிஷ தாஸ்திதா6.
ஒன்று மாற்றி ஒன்றாகக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருந்தால் . . .கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் நூற்றியெட்டுத் தடவை ஜபம் செய்து வந்தால் கஷ்டங்கள் நிவர்த்தியாகும்.மந்திரம் :கேதநீ மல்லிகா ளஸோகா வாராஹீ தரணீத்ருவாநாராஸிம்ஹீ மஹோக்ராஸ்யா பக்தாநா மார்தி நாஸிநீ
7.
மோட்ச பாக்கியம் பெற வேண்டும் என்று விரும்பினால் . . .கீழ் வரும் மந்திரத்தைத் தினமும் பதினாறு தடவை ஜபம் செய்து வரவும்.மந்திரம் :கைவல்ய பதவீ புண்யா கைவல்ய ஜ்ஞாந லக்ஷிதாப்ரஹ்ம ஸம்பத்தி ரூபா ச ப்ரஹ்ம ஸம்பத்தி காரிணீ8.
எல்லா விதமான நோய்களும் நீங்க . . .கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் காலையில் எட்டு முறை ஜலத்தில் ஜபிக்கவும்.அந்த ஜலத்தை நோயாளியின் மேல் தெளிக்கவும். உள்ளுக்கும் அருந்தக் கொடுக்கவும்.மந்திரம் :ஸர்வ ப்ரமாணா ஸம்பத்தி : ஸர்வரோக ப்ரதிக்ரியாப்ரஹ்மாண்டாந்தர் பஹிர் வ்யாப்தா விஷ்ணு வக்ஷோ விபூஷணி9.
சீக்கிரத்தில் திருமணம் நடைபெற . . .கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் பத்துத் தடவை ஜபிக்கவும்.மந்திரம் :புத்ர பௌத்ராபி வ்ருத்திஸ்ச வித்யா போக பலாதிகம்ஆயுராரோக்ய ஸம்பத்தி : அஷ்டைஸ்வர்யம் த்வமேவ ஹி10.
எல்லாவித நன்மைகளும் உண்டாக . . .கீழ் வரும் மந்திரத்தை இரவில் தூங்கச் செல்வதற்கு முன் -தினமும் பதினோரு தடவை ஜபித்து வரவும்.மந்திரம் :மங்களம் மங்களாநாம் த்வம் தேவாத்நாம் ச தேவதாத்வமுத்த மோத்த மாநாம்ச த்வம் ஸ்ரேய : பரமாம்ரு தம்11.
விஷத்தினால் உண்டாகக்கூடிய அச்சம் அகல . . .கீழ் வரும் மந்திரத்தை -விஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காதுகளில் குனிந்து எத்தனை அதிகத் தடவை கூறமுடியுமோ அத்தனை அதிகமாகக் கூறினால் -விஷத்தினால் உண்டாகும் ஆபத்து விலகும்.மந்திரம் :க்ஷ&த்ர ஜந்து பயக் நீ விஷரோகாதி பஞ்ஜநீஸதா ஸாந்தா ஸதா ஸுத்தாக்ருஹச் சித்ரநிவாரிணீ12.
ஞானம் வளர . . .கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் பனிரெண்டு தடவை தினந்தோறும் ஜபிக்கவும்.மந்திரம் :அர்த்த நாரீஸ்வரீ தேவீ ஸர்வ வித்யா ப்ரதாயிநீபார்கவீ பூஜுஷீ வித்யா ஸர்வோப நிஷ தாஸ்திதா.