தொடர்புடைய செய்திகள்
- மகாசிவராத்திரி கொண்டாட்டத்தில் விபரீதம்.. மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்...!
- ஒச்சாண்டம்மன் கோவிலின் மாசி பெட்டி திருவிழா கோலாகலம்..!!
- சிவராத்திரியை முன்னிட்டு பிரபாஸின் கல்கி படக்குழு வெளியிடும் அப்டேட்!
- குமரியில் 12 சிவாலயங்களில் மகாசிவராத்திரி உற்சவம்! கடலென திரண்ட பக்தர்கள்! – பேருந்து, ஆட்டோ கிடைக்காமல் அவதி!
- மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி குலதெய்வ கோவிலுக்கு இரட்டை மாட்டு டயர் வண்டியில் பயணம்!
விடிய விடிய கொண்டாடப்படும் மகா சிவராத்திரி..!
இன்று விடிய விடிய கொண்டாடப்படும் மகா சிவராத்திரி, இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இன்றைய மகா சிவராத்திரி தினத்தில், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடினார் என்று நம்பப்படுகிறது.
மகா சிவராத்திரி விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால், அறியாமல் செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மகா சிவராத்திரி இரவில் சிவபெருமானை வழிபட்டால், மோட்சம் பெற வழி கிடைக்கும்
பக்தர்கள், மகா சிவராத்திரி இரவு முழுவதும் விரதம் இருந்து, சிவபெருமானை வழிபடுவார்கள். சிவபெருமானுக்கு பால், தேன், பழங்கள், மலர்கள் போன்றவற்றை அபிஷேகம் செய்து, பூஜை செய்வார்கள். பக்தர்கள், "ஓம் நமசிவாய" மந்திரத்தை மனதுக்குள் கூறி சிவபெருமானின் அருளைப் பெறுவார்கள்.
சிவபெருமானை நினைத்து, இரவு முழுவதும் கண் விழித்திருப்பார்கள். பக்தர்கள், சிவன் கோயில்களுக்கு சென்று, சிவபெருமானை தரிசனம் செய்வார்கள்.
Edited by Mahendran
