1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. The Power and Influence of Lord Shani

சனி பகவானின் பயன்கள் மற்றும் வழிபாடு

Sani Baghavan
ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் உச்ச ஸ்தானத்தில் இருந்தால், அவர் கடின உழைப்பால் செல்வம் சேர்த்து, சமுதாயத்தில் மதிப்பும் பெருமையும் பெறுவார். இவரைப் பார்த்து அனைவரும் நேர்மையான, உயர்ந்த மனிதர் என பாராட்டுவார்கள். சனி பகவான் எவ்வளவு சக்திவாய்ந்த நிலையில் இருக்கிறாரோ, அதைப் பொறுத்தே ஒருவரின் நேர்மை மற்றும் நெறியுடைமை நிர்ணயிக்கப்படும்.
 
சனி பகவான் பலம் இழந்து நீசம் அடைந்தால், உடல்நலக் குறைப்பாடுகள், நரம்புக் கோளாறுகள் மற்றும் காக்கை வலிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டால், சனிக்குரிய பரிகாரங்களை செய்தல், மருத்துவரின் ஆலோசனை பெறுதல் ஆகியவை அவசியம். இது வெற்றிகளை உருவாக்க உதவும்.
 
சனி திசை ஒருவருக்கு வழங்கும் அனுபவம் வாழ்க்கையின் எந்த பகுதியிலும் கிடைக்க முடியாத ஒரு பயிற்சி. 7½ சனி நேரத்தில், அந்த நபர் கும்பம், மகரம், துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி போன்ற ராசிகளில் இருந்தால், சனி அவரை நல்வழிப்படுத்தி உயர்வுறச் செய்வார். மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளில் இருந்தால், கடுமையான அனுபவங்களின் மூலம் பாடம் கற்பித்து பிறகு நல்வழிக்குக் கொண்டு வருவார். மீனம், தனுசு ராசிக்காரர்களுக்கு தண்டனை வழங்கி முன்னேற்றப் பாதையை காட்டுவார்.
 
சனிக்கிழமை காலை குளித்து, தூய்மையான உடை அணிய வேண்டும். எள்ளு சாதம், எள் கலந்த பிரசாதங்கள், கசப்பு உணவுகள், பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு வழிபாடு செய்யலாம்.
 
சனிக்கிழமையில் விரதம் இருந்து, எள்ளை வெள்ளை துணியில் கட்டி, திரியாக செய்து, எள்ளெண்ணெய் விளக்கேற்றி தீபம் ஏற்ற வேண்டும். பூஜை முடிந்ததும், எள்ளு சாதத்திலிருந்து சிறிதளவு ஒரு இலையில் வைத்து, காக்கைக்கு உணவாக வைக்க வேண்டும்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை திருப்தி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (25.03.2025)!