தொடர்புடைய செய்திகள்
- பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. சிறப்பு பூஜைகள்..!
- இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!
- பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!
- சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரவிமோகன் - கார்த்தி.. நண்பர்களின் ஆன்மீக பயணம்..!
இன்று ஒருநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. என்ன விசேஷம்?
சபரிமலை ஐயப்பன் கோவில், வருடத்தின் பெரும்பாலான நாட்களில் மண்டல காலம் மற்றும் மகர விழா போன்ற முக்கிய கட்டங்களில் மட்டுமல்லாமல், மாதாந்திர பூஜைகள் மற்றும் சில விசேஷ நாள்களிலும் பக்தர்களுக்கு திறக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் இன்றைய நாளில் வந்துள்ளது. இதையொட்டி, கோவிலின் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி வழிபாட்டு நடை திறப்பை மேற்கொண்டார்.
இன்று அதிகாலை, பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கியுள்ளன. பக்தர்கள் ஆராதனையில் ஈடுபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்றைய பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவடைந்தவுடன், இரவு 10.30 மணிக்கு கோவில் நடை மூடப்படும்.
அதேபோல், ஆனி மாத மாதாந்திர பூஜைகளை முன்னிட்டு ஜூன் 14ஆம் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து, ஜூன் 15 முதல் 19 வரை ஐந்து நாட்கள் பூரண பூஜைகள் நடைபெறவுள்ளன.
Edited by Mahendran
