1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Powerful Shiva Mantras to Chant on Mahashivaratri

மகாசிவராத்திரியில் துதிக்க சக்திமிகு சிவ மந்திரங்கள்!

Lord Shiva
மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வேண்டி வந்தால் சிவபெருமானின் பூரண அருள் கிடைக்கும்.


 
மகாசிவராத்திரி சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் முக்கியமான நாளாகும். இந்த நாளில் சிவபெருமானை மனதில் வேண்டி இரவு கண்விழித்து உபவாசம் இருந்து வந்தால் வேண்டியது, வேண்டாதது சகலத்தையும் அள்ளி தந்து ஆசி வழங்குவார் பரமேஸ்வரர்.

மகாசிவராத்திரியில் சிவனை வேண்டி உபவாசம் இருக்கும்போது சிவனை போற்றும் சக்திமிகு மந்திரங்களை உச்சாடனம் செய்வது சிவனின் அருள் கிரகங்கள் நம் மீது விழுவதை அதிகரிக்க செய்யும். சிவ அருளை அதிகரிக்கும் சிவ மந்திரங்கள் சில..

சிவ பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை 108 முறை இடைவெளி விட்டு மனமாற துதி செய்ய வேண்டும்.

சிவ தியான மந்திரம்:
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்வரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

சிவ காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சதாசிசிவ வித்மஹே
ஜடாதராய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே
அதிசுத்தாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் கௌரீநாதாய வித்மஹே
சதாசிவாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சிவோத்தமாய வித்மஹே
மஹோத்தமாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் தன்மஹேசாய வித்மஹே
வாக்விசித்தாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவாய வித்மஹே
ருத்ரமூர்த்யே தீமஹி
தன்னோ சிவ ப்ரசோதயாத்

ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே 
மஹா தேவாய தீமஹி
தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத்

Edit by Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நாளை காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து - திரையரங்க உரிமையாளர்கள்