ஏகாதசி பற்றி புராணங்கள் பல்வேறு கதைகளை கூறுகின்றன. அவற்றில் ஒன்று, விஷ்ணு புராணத்தில் முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். இதனால், அவர்கள் அனைவரும் அசுரனை அழித்து தங்களை காக்குமாறு சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் அவர்களிடம் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுமாறு கூறுகிறார். அதன்படி தேவர்களும் முனிவர்களும் ஸ்ரீமகாவிஷ்ணுவை சரணடைந்தனர். தேவர்களையும் முனிவர்களையும் காப்பதாகக் கூறிய ஸ்ரீமகாவிஷ்ணு அசுரன் முரனோடு போர் புரியத் தொடங்கினார்....