தொடர்புடைய செய்திகள்
- திருமலை தர்மகிரியில் சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் !
- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணம்
- திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? மர்ம நபர் அனுப்பிய இமெயிலால் பரபரப்பு..!
- திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம் செய்ய 30 மணி காத்திருக்கும் பக்தர்கள்
- 14 மொபைல் மெசெஞ்சர் செயலிகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
ஜம்முவில் திருப்பதி தேவஸ்தானத்தின் ஏழுமலையான் கோவில்: கும்பாபிஷேக தேதி அறிவிப்பு..!
திருப்பதி தேவஸ்தானம் நாட்டின் பல நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்டி வந்தது.
இந்த நிலையில் இந்த கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
ரூபாய் 30 கோடி செலவில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் 62 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும் திருப்பதியில் உள்ளது போல் அனைத்து வசதிகளும் இந்த கோவிலில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
வைஷ்ணவா தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த கோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குமாறு ஜம்மு அரசிடம் கேட்டுக் கொள்ளபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
