1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Ancestral Worship: Easy Remedies to Remove Pitru Dosha

அமாவாசை வழிபாடு: முன்னோர் சாபம் நீங்க எளிய பரிகாரங்கள்

அமாவாசை
முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவதற்கும், பித்ரு தோஷங்களை நீக்குவதற்கும் அமாவாசை நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில், பலவிதமான வழிபாடுகள் மற்றும் சடங்குகள் செய்யப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை இங்கு விரிவாகக் காணலாம்.
 
பித்ரு தோஷம் மற்றும் அதன் விளைவுகள்
 
முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யாதவர்களுக்கு 'பித்ரு தோஷம்' ஏற்படும். இந்த தோஷம் ஒருவரின் தலைமுறையையே பாதிக்கும். ஒருவர் தன் வாழ்நாளில் அதிக புண்ணியத்தால் இந்த தோஷத்தின் பாதிப்பை உணர முடியாமல் போகலாம். ஆனால், அது அவரது சந்ததியினரை கடுமையாகப் பாதிக்கும். ஒரு குடும்பத்திற்கு சொத்து சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, பித்ரு தோஷத்தை மட்டும் விட்டு செல்லக் கூடாது.
 
தர்ப்பணத்தின் மகிமை
 
ஒவ்வொரு அமாவாசையன்றும் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி மற்றும் தர்ப்பண பூஜைகள், நமது வம்சத்தினருக்கு நன்மைகளை வாரி வழங்கும். 'தர்ப்பணம்' என்பது, எள் மற்றும் நீர் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்துச் செய்யப்படுவதாகும். இந்தத் தர்ப்பண நீரின் சக்தி, பூமியின் ஈர்ப்பு விசையை மீறி, பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை அடைந்து முன்னோர்களுக்குச் சேர்கிறது. அமாவாசை நாளில் இந்த சக்தி அபரிமிதமாகப் பெருகுகிறது.
 
அமாவாசை விரதம் மற்றும் வழிமுறைகள்
 
அமாவாசை நாளில் உணவு ஏதும் உண்ணாமல் விரதமிருந்து மந்திரங்களை உச்சரித்து வழிபட்டால், சகல பாக்கியங்களும் உண்டாகும். அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது விசேஷ சக்திகளைக் கொடுக்கும். இது கெட்ட சக்திகளை விரட்டிவிடும். வீட்டைத் தண்ணீர் மற்றும் சிறிது கல் உப்பு சேர்த்துத் துடைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேலும், காலை, மாலை இரு வேளையும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
 
அமாவாசை அன்று விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என அனைவரும் அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது. இது அறிவியல் ரீதியாகவும் உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran