1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Aadi Month: Amman Worship and Abundance!

நாளை ஆடி முதல் வெள்ளி.. அம்பிகையை எவ்வாறு வழிபட வேண்டும்?

ஆடி மாதம்
ஆடி மாதம், அன்னை பராசக்தி உயிர்களைக் காக்க பல்வேறு வடிவங்களில் அவதரித்த புனித மாதமாகும். ஆடி மாதம் முழுவதும் சிறப்பானது என்றாலும், ஆடி வெள்ளி தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு, ஆடி மாதம் தொடங்கிய மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. ஆடி மாத முதல் வெள்ளியில் அம்பிகையை எவ்வாறு வழிபடுவது என்று பார்க்கலாம்.
 
அதிகாலையில் நீராடி, வாசலில் கோலமிட்டு, வீட்டைத் தூய்மைப்படுத்துங்கள். பூஜை அறையைச் சுத்தம் செய்து, தெய்வப் படங்களை மலர்களால் அலங்கரியுங்கள். நிலை வாசலில் வேப்பிலைக் கொத்துக்களைக் கட்டுங்கள். கலசச் செம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரித்து, பூஜை அறையின் மத்தியில் மாக்கோலமிட்ட நடுவே வையுங்கள். அந்தக் கலச நீரில் அம்பிகை எழுந்தருளி, வளங்கள் வழங்க மனமுருகி வேண்டுங்கள்.
 
குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு தீபாராதனை காட்டி, சர்க்கரைப் பொங்கலை நிவேதனமாகப் படைக்கலாம். முடிந்தால், ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை பயக்கும்.
 
கூடுதலாக, குத்துவிளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், பழம், தேங்காய் போன்ற மங்கலப் பொருட்களை வழங்கலாம். இது எல்லா நன்மைகளையும் உங்கள் இல்லத்திற்கு வரவழைக்கும்.
 
ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் வழிபட முடியாதவர்கள், குறைந்தது ஒரு வெள்ளிக்கிழமையிலாவது வழிபடலாம். இதனால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இன்மை, மாங்கல்ய தோஷம் நீங்கி, நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த ராசிக்காரர்களுக்கு பெரியவர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்! இன்றைய ராசி பலன்கள் (18.07.2025)!