1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 ஜூன் 2018 (15:36 IST)

சரும அழகை அதிகரிக்க... ரோஸ் வாட்டர்!

சரும பிரச்சனைகளான எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம், மென்மையிழந்த சருமம் போன்றவற்றில் இருந்து ரோஸ் வாட்டர் எப்படி பாதுகாக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள்...
 
# முகம் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும் போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
 
# ரோஸ் வாட்டர் ப்ரிட்ஜில் வைத்து, அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்கள் அழகாக காணப்படும்.
 
# தினமும் குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
 
# ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாகவும் காட்டும். 
 
# வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறும்.