வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (11:22 IST)

கொத்தமல்லியை எப்படி பயன்படுத்தி நன்மைகளை பெறலாம்..?

மிக எளிதாகவும் மளிவான விலையிலும் அனைத்து காலகட்டத்திலும் கிடைக்ககூடியது கொத்தமல்லி. இதனால்தான் என்னவோ அதன் பயன் நமக்கு அதிக அளவில் தெரியவில்லை.
 
# கொத்தமல்லியை பேஸ்டாக்கி சருமத்திற்கு தடவினால், சரும பிரச்சனைகள் தீரும். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.
 
# கொத்தமல்லியை அரைத்து, கண்களுக்கு மேலே பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. 
 
# மேலும், கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள், கருவளையங்கள்  ஆகியற்றை இந்த கொத்தமல்லி போக்குகிறது.
 
# கொத்தமல்லி வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை போக்குகிறது.  
 
# கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. 
 
# கொத்தமல்லி அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 
 
# கொத்தமல்லி விதைகளை (தனியா) தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். 
 
# தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள், அடிக்கடி ஏப்பம் வருவது, நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.