வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. க‌ட்டுரைக‌ள்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (13:58 IST)

காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம்

(இதை ஓதுபவர்கள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர்)
 


தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள்

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க வாய்ந்த சென்னி
அளவுபடா அதிகசவுந் தரதேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரறநெற் றியை என்றும்விளங்கிய
காசிபர் காக்க புருவந்தம்மைத்
தளர்வில் மகோதரர்காக்க
தடவிழிகள் பாலசந் திரனார் காக்க.

உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு

கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங்கணக் கிரீடர் காக்க
நவில்சிபுகம் கிரிசைசுதர் காக்க
நனிவாக்கைவிநா யகர்தாம் காக்க
அவிர்நகை மின் முகர் காக்க
அள் எழிற் செஞ் செவிபாச பாணி பாக்க
தவிர்தலுறா திளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க.
முகம், கழுத்து, இணையான தோள்கள், முலை, உள்ளம், வயிறு

காமருபூ முகந்தன்மைக் குணேசர்
நனி காக்க களக் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த
பூர்வசர் தாம்மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க

பக்கங்கள், குறி, குய்யம், தொண்டைகள்

பக்கம் இரண்டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரன் காக்க விளங்கிலிங்கம்
வியாளபூ டணர்தாம் காக்க
தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்க
சகலத்தை அல்லல் உக்கண பன் காக்க
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க