செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2016 (17:59 IST)

வெளியேறிய வீரலட்சுமி : பலம் குறைந்த மக்கள் நலக் கூட்டணி

மக்கள் நலக் கூட்டணியிலிருந்து, வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப்படை விலகுவதாக அறிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தவர்தான் வீரலட்சுமி. பம்பரம் சின்னத்தில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அங்கு அவர் படுதோல்வி அடைந்தார். 
 
இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுவதாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார். வைகோவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்ததால் இந்த முடிவு எடுத்திருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
 
மேலும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அவர் தனித்துப் போட்டி என்று கூறி அதிர வைத்துள்ளார். அதற்காகவே ஒரு கட்சி ஆரம்பித்து, அதற்கு அகில இந்திய தமிழர் முன்னேற்றக் கட்சி என்று பெயர் வைத்துள்ளார்.