1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 5 மே 2017 (05:54 IST)

டெல்லி தூதருடன் தினகரன் பேரமா? சசியின் மறுசீராய்வு மனுவின் பின்னணி!

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தன்னை விடுவிக்க வேண்டும் என்று மறுசீராய்வு மனு போட்டிருப்பதை அனைவரும் சாதாரணமாக பார்த்தாலும், அதில் டெல்லி தலையீடு இருப்பதாகவும், டெல்லியில் உள்ள அதிகாரமிக்கவர்களின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த மனு போடப்பட்டுள்ளதாக புலனாய்வு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



 


திஹார் சிறையில் உள்ள தினகரனிடம் டெல்லியில் உள்ள அதிகாரமிக்கவர்களின் தூதர் ஒருவர் சந்தித்ததாகவும், சசிகலா குடும்பத்தினர் சேர்த்து வைத்த மொத்த சொத்துக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதாவது பாதிக்கும் மேல், கொடுத்துவிட்டால் சசிகலாவுக்கு பரோல், மற்றும் தினகரனுக்கு விடுதலை என்று டீல் பேசியதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசு வட்டாரங்கள் இது பொய்யான தகவல் என்று கூறுகின்றன. தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் புரொஜக்ட் என்றும், அதற்கு சசிகலா குடும்பத்தினர் அரசியலில் இருந்தே வெளியேற வேண்டும், அவர்களுடன் எந்தவித டீலும் கிடையாது என்றும் கூறுகின்றன.