கொலுவில் பாட வேண்டிய பாடல்கள்
கொலுவில் ஒவ்வொரு நாளும் பாட வேண்டிய பாடல்களை ராகத்துடன் அளித்துள்ளோம். முதல் நாள்தேவியைப் பற்றிய பாடல்களை தோடி ராகத்தில் பாடுவது சிறப்பானது.பாடல்: கற்பகவல்லி நின்ராகம்: ராகமாலிகாராகம்: ஆனந்த பைரவி கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்நற்கதி அருள்வாயம்மா தேவி (கற்பகவல்லி)பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பகவல்லி)ராகம்: ஆனந்த பைரவிநீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா (கற்பகவல்லி)ராகம்: கல்யாணிஎல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்நல்லாட்சி செய்திடும் நாயகியே நித்யகல்யாணியே கபாலி காதல் புரியும் அந்தஉல்லாசியே உமா உனை நம்பினேனம்மா (கற்பகவல்லி)ராகம்: பாகேஸ்ரீநாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்தலோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா (கற்பகவல்லி)ராகம்: ரஞ்சனிஅஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா (கற்பகவல்லி)
இரண்டாம் நாள்:கல்யாணி ராகத்தில் தேவியைப் பற்றிய பாடல்களைப் பாடலாம்.பாடல்: உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மாவரிகள்: அம்புஜம் கிருஷ்ணாராகம்: கல்யாணிதாளம்: ஆதிஉன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மாஉலகெல்லாம் ஈன்ற அன்னை (உன்னையல்லால்)என்னையோர் வேடமிட்டுலக நாடக அரங்கில் ஆடவிட்டாயம்மாஇனியாட முடியாது என்னால் திருவுள்ளம் இரங்கிஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னையல்லால்)நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷிஎன பலபெயருடன்எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலினில்எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் (உன்னையல்லால்
மூன்றாம் நாள்:தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.பாடல்: நானொரு விளையாட்டு பொம்மையாவரிகள்: பாபனாசம் சிவன்ராகம்: நவரச கானடாதாளம்: ஆதிநானொரு விளையாட்டு பொம்மையாஜகன் நாயகியே உமையே உந்தனுக்குநானிலத்தில் பல பிறவியெடுத்துதிண்டாடியது போதாதா (தேவி) - உந்தனுக்கு (நானொரு)அருளமுதைப் பருக அம்மா அம்மா என்றுஅலறுவதைக் கேட்பதானந்தமாஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனேதிருவுளம் இரங்காதா (தேவி) - உந்தனுக்கு (நானொரு)
நான்காம் நாள்:அம்பிகையின் பாடல்களை பைரவி ராகத்தில் பாட வேண்டும்.பாடல்: நீ இரங்காயெனில் புகலேதுவரிகள்: பாபனாசம் சிவன்ராகம்: அடானாதாளம்: ஆதிநீ இரங்காயெனில் புகலேது அம்பாநிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்)தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோசகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்)பாற்கடலில் உதித்த திருமளியே - ளபாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியேநாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்
ஐந்தாம் நாள்:தேவியின் பாடல்களை பந்துவராளி ராகத்தில் பாட வேண்டும்.பாடல்: அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்வரிகள்: பாபனாசம் சிவன்ராகம்: பந்துவராளிதாளம்: ஆதிஅம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்திருவடி இணை துணையென் (அம்பா)வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்கதம்ப வனக்குயிலே ஷங்கரி ஜகதம்பா (மனம்)பைந்தமிழ் மலர்ப்பாமாலை சூடி உன் பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்சிந்தையும் என் நாவும் என்னேரமும் நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர் வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்இந்த வரம் தருவாய் ஜகதீ°வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா)
ஆறாம் நாள்:தேவியைப் பற்றிய பாடல்களை நீலாம்பரி ராகத்தில் பாடுவது சிறப்பு.பாடல்: தேவி நீயே துணைவரிகள்: பாபனாசம் சிவன்ராகம்: கீரவாணிதாளம்: ஆதிதேவி நீயே துணைதென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி)தேவாதி தேவன் சுந்தரேசன்சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா (தேவி)மலையத்வஜன் மாதவமே - காஞ்சனமாலை புதல்வி மஹாராக்னிஅலைமகள் கலைமகள் பணி கீர்வாணிஅமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)
ஏழாம் நாள்:தேவியைப் போற்றிப் பாடும் பாடல்களை பிலஹரி ராகத்தில் பாடுவது சிறப்பு.பாடல்: ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணிவரிகள்: கானம் கிருஷ்ண ஐயர்ராகம்: ரதிபதிப்ரியாதாளம்: ஆதிஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்)சுக ஸ்வரூபிணி மதுர வாணிசொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்)பாண்டிய குமாரி பவானி அம்பா சிவபஞ்சமி பரமேஷ்வரிவேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோவேத வேதாந்த நாத ஸ்வரூபிணி (ஜகத்)
எட்டாம் நாள்:தேவியின் பாடல்களை புன்னாகவராளி ராகத்தில் பாடுதல் நலம்.பாடல்: ஸ்ரீசக்ர ராஜராகம்: ராகமாலிகாராகம்: செஞ்சுருட்டிஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனே°வரிஸ்ரீலலிதாம்பிகையே புவனே°வரிஆகம வேத கலாமய ரூபிணிஅகில சராசர ஜனனி நாராயணிநாக கங்கண நடராஜ மனோஹரிஞான வித்யேஷ்வரி ராஜராஜே°வரி (ஸ்ரீசக்ர)ராகம்: புன்னாகவராளிபலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்உலகம் முழுதும் என் அகமுறக் காணவும்ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி (ஸ்ரீசக்ர)ராகம்: நாதனாமக்ரியைஉழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்நிழலெனத் தொடர்ந்த முன்னாள் கொடுமையை நீங்கச் செய்தாய்நித்ய கல்யாணி பவானி பத்மேஷ்வரி (ஸ்ரீசக்ர)ராகம்: சிந்து பைரவிதுன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய்தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டே°வரி (ஸ்ரீசக்ர)
ஓன்பதாம் நாள்:தேவியின் திருப்பாடல்களை வசந்தா ராகத்தில் பாடுவது உகந்தது.பாடல்: மாணிக்க வீணையேந்தும்ராகம்: மோகனம்மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணிதேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மாபாடவந்தோமம்மா பாட வந்தோம்அருள்வாய் நீ இசை தர வா நீ - இங்குவருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா (மாணிக்க)நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க)வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள்உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும்அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயேவாணி சரஸ்வதி மாதவி பார்கவிவாகதீஸ்வரி மாலினிகாணும் பொருள்களில் தோன்றும் கலைமணிவேண்டும் வரம் தரும் வேணி நீநான்முக நாயகி மோஹன ரூபிணிநான்மறை போற்றும் தேவி நீவானவர்க்கினிதே தேனருள் சிந்தும்கான மனோஹரி கல்யாணி (அருள்வாய்) (மாணிக்க)
தசமி அன்று:பாடல்: கருணை தெய்வமே கற்பகமேவரிகள்: மதுரை ஸ்ரீநிவாசன்ராகம்: சிந்து பைரவிதாளம்: ஆதிகருணை தெய்வமே கற்பகமேகாணவேண்டும் உந்தன் பொற்பதமே என் (கருணை)உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய்உன்னையன்றி வேறு யாரோ எம் தாய் (கருணை)ஆனந்த வாழ்வு அளித்திட வேண்டும்அன்னையே எம்மேல் இரங்கிட வேண்டும்நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும்நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)