1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. The statue of Dhandayuthapani idol in any form want to see...?

தண்டாயுதபாணி சிலையை எந்த கோலத்தில் தரிசிக்க வேண்டும்....?

தண்டாயுதபாணி சிலை
பழநி தண்டாயுதபாணி சிலை முற்றும் துறந்த தவநிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய் ஞானம் உண்டாகும் என்பதற்காக,பெரியஞானிக ளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள்.
முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலை களைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பி பார்க்கலாம். வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல்  நன்று.
 
20 வருடமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன். தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன்  வழிகாட்டுவார்.
 
தீராத நோய், என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை  தரிசிக்கலாம். மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு  மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
 
பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச் சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் ஆண்டி கோலத்தைப் பார்த்தால்  ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மன திற்குள் பாயும்.
 
பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், பத்திரிக்கை அடித்து கும்பிடப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக் கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில்  தரிசிக்கலாம்.
 
நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம். நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம் ஆகும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சிவராத்திரியன்று நள்ளிரவு வழிபாடு ஏற்படுவதால் நற்பலன்கள் என்ன...?