வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி
Written By Geetha priya
Last Updated : வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (15:24 IST)

‌‌‌‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌யி‌ன்போது கடை‌பிடி‌க்க வே‌ண்டிய விரத நடைமுறைக‌ள்

விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி ‌விரத‌த்தை ஒரு கொ‌ண்டா‌ட்டமாகவே நா‌ம் பா‌வி‌க்‌கலா‌ம். ‌விநாயக‌ர் ‌மிகவு‌ம் எ‌ளிமையான கடவு‌ள். அதாவது யா‌ர் கூ‌ப்‌‌பி‌ட்டாலு‌ம் உடனே ஓடோடி வ‌ந்து அரு‌ள் தருவா‌ர். அதனா‌ல்தா‌ன் அவ‌ர் எ‌ல்லாரு‌க்கு‌ம் பொதுவாகவு‌ம், யாரு‌ம் சுலபமாக பூ‌ஜி‌க்கு‌ம் வகை‌யிலு‌ம் இரு‌க்‌கிறா‌‌ர்.
‌இ‌னி கடை‌ப்‌பிடி‌க்க வே‌ண்டிய ‌விரத‌த்தை ப‌ற்‌றி பா‌ர்‌ப்போ‌ம்... விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி அ‌ன்று ‌விடிய‌ற் காலை‌யிலேயே எழு‌ந்து, சு‌த்தமாக கு‌ளி‌த்து‌வி‌ட்டு, ‌வீ‌ட்டையு‌ம் பெரு‌க்‌கி மெழு‌கி சு‌த்தமா‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். வாச‌லி‌ல் மா‌விலை‌த் தோரண‌ம் க‌ட்டலா‌ம். முடி‌ந்தா‌‌ல், இ‌ர‌ண்டு வாழை‌க் க‌ன்றுகளையு‌ம் வாச‌லி‌‌ன் இருபுற‌ங்க‌ளிலு‌ம் க‌ட்டலா‌ம்.
 
‌பிறகு பூஜையறை‌யிலே சு‌த்த‌ம் செ‌ய்த ஒரு மனையை வை‌க்க வே‌ண்டு‌ம். அத‌ன் மே‌‌ல் ஒரு கோல‌ம் போ‌ட்டு, அத‌ன் மே‌ல் ஒரு தலை வாழை இலையை வை‌க்க வேண்டு‌ம். இலை‌யி‌ன் நு‌னி வட‌க்கு பா‌‌ர்‌த்தமா‌தி‌ரி இரு‌ப்பது ந‌ல்லது. இ‌ந்த இலை மே‌ல் ப‌ச்ச‌ரி‌சியை‌ப் பர‌ப்‌பி வை‌த்து, நடு‌வி‌ல் க‌ளிம‌ண்ணாலான ‌‌பி‌ள்ளையாரை வை‌க்க வே‌ண்டு‌ம். பூ‌மி‌யிலிருந்து உருவான எதுவு‌ம் பூ‌மி‌க்கே ‌திரு‌ம்ப‌ச் செல்லும் எனும் த‌த்துவ‌ம்தா‌ன் க‌ளிம‌ண் ‌பி‌ள்ளையா‌ர்.
 
க‌‌ளிம‌ண் ம‌ட்டு‌ம்தா‌ன் எ‌ன்‌றி‌ல்லாம‌ல், உலோக‌ம், க‌ற்‌சிலை ‌வி‌க்ரக‌ங்களையு‌ம் வை‌க்கலா‌ம். ப‌த்ரபு‌ஷ்ப‌ம் என‌ப்படு‌ம் ப‌ல்வகை‌ப் பூ‌க்க‌ள் கொ‌ண்ட கொ‌‌த்து, எரு‌க்க‌ம் பூ மாலை, அருக‌ம்பு‌ல், சாம‌ந்‌தி, ம‌ல்‌லி‌கை என்று எ‌த்தனை வகை பூ‌க்களை வா‌ங்க முடியுமோ, அவரவ‌ர் வச‌தி‌க்கே‌ற்ப வா‌ங்‌கி‌க் கொ‌ள்ளலா‌ம். அதேமா‌தி‌ரி முடி‌ந்தளவு‌க்கு ‌சில வகைப் பழ‌ங்‌களையு‌ம் வா‌‌ங்‌கி‌க் கொ‌ள்ளலா‌ம்.
 
 
இவை எ‌ல்லாவ‌ற்றையு‌ம் ‌விட, ‌‌விநாயகரு‌‌க்கு ரொ‌ம்பவு‌ம் ‌பிடி‌த்தமான மோதக‌த்தை‌த் தயா‌‌ர் ப‌ண்‌ணி‌க் கொ‌ள்ளலா‌‌ம். அதாவது தே‌ங்கா‌ய் பூ‌ரண‌த்தை உ‌ள்ளே வை‌த்து செ‌ய்ய‌ப்படும் கொழு‌க்க‌ட்டை. இ‌திலு‌ம் ஒரு த‌த்துவ‌ம் இரு‌க்‌கிறது. மேலே இரு‌க்கு‌ம் மாவு‌ப் பொரு‌ள்தா‌ன் அ‌ண்ட‌ம். உ‌ள்ளே இரு‌க்கு‌ம் வெ‌‌ல்ல‌ப் பூ‌‌ரண‌‌ம்தா‌ன் ‌பிர‌ம்ம‌ம்.
 
அதாவது நம‌க்கு‌ள் இரு‌க்கு‌‌ம் இ‌‌னிய குண‌ங்களை மாயை மறை‌க்‌கிறது. இ‌ந்த மாயையை உடை‌த்தா‌ல் அதாவது வெ‌ள்ளை மாவு‌ப் பொருளை உடை‌த்தா‌ல், உ‌ள்ளே இ‌னிய குணமான வெ‌ல்ல‌ப் பூ‌ரண‌ம் நம‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம் (விநாயகரு‌க்கு முத‌ன் முறையாக இ‌ந்த‌க் கொழு‌க்க‌ட்டையை ‌நிவேதன‌ம் செ‌ய்தது வ‌சி‌ஷ்‌ட மு‌னிவருடைய மனை‌வியான அரு‌ந்த‌தி).
 

பி‌ள்ளையாரு‌க்கு பூ‌க்களா‌ல் அல‌ங்கார‌ம் செ‌ய்து ‌வி‌ட்டு, ‌பிறகு ‌‌விநாயக‌ர் பா‌ட‌ல்க‌ள் எதை வேணு‌ம்னாலு‌ம் பாடலா‌ம். ஒளவையா‌ர் த‌ந்த ‌விநாயக‌ர் அகவ‌ல், கா‌ரிய ‌சி‌த்‌தி மாலை எ‌ன்று படி‌ப்பது‌ம் ‌விசேஷமான பல‌ன்களை‌த் தரு‌ம். ‌பி‌ள்ளையாரு‌க்கு கொழு‌க்க‌ட்டை ம‌ட்டு‌மி‌ல்லாம‌ல், அவரவ‌ர் வச‌தி‌‌க்கே‌ற்ப எ‌ள்ளுரு‌ண்டை, பாயச‌ம் எ‌ன்று‌ம் நைவே‌த்ய‌ம் செ‌ய்யலா‌‌ம். பா‌ல், தே‌ன், வெ‌ல்ல‌ம், மு‌ந்‌தி‌‌ரி, அவ‌ல் என்று ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ‌சி‌றிதளவு எடு‌த்து ஒ‌ன்றாக‌க் கல‌ந்து அதையு‌ம் நைவே‌த்ய‌ம் செ‌ய்யலா‌ம். ‌நிவேதன‌ப் பொரு‌ட்க‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் 21 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் ‌சில‌ர் வை‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல், எ‌ண்‌ணி‌க்கை மு‌க்‌கிய‌மி‌ல்லை. அவரவ‌ர் ஈடுபாடுதா‌ன் மு‌க்‌கிய‌ம். ‌பிறகு க‌ற்பூர‌ம் கா‌ட்டி ‌விர‌த‌த்தை முடி‌க்கலா‌ம்.
இ‌ந்த ‌விரத‌த்தை காலை‌யி‌‌லிரு‌ந்தே உணவு எதுவு‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல் அனு‌ஷ்டி‌ப்பது ரொ‌ம்பவு‌ம் ‌விசேஷ‌ம். ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி அ‌ன்றைக்கு ந‌ல்ல நேர‌ம் எதுவென்று ப‌‌ஞ்சா‌ங்க‌த்‌திலோ அ‌ல்லது பெ‌‌ரியவ‌ர்க‌ள் மூலமாகவோ தெ‌ரி‌ந்து கொ‌ண்டு அ‌ந்த நேர‌த்தில் பூஜையை வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
 
அ‌ந்த நேர‌ம் வரை‌க்கு‌ம் விரதம் இரு‌ப்பது ‌சிற‌ப்பு. ச‌ம்‌பிரதாய‌ம் பா‌ர்‌க்க‌க் கூடியவ‌ர்க‌ள் இ‌ந்த ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌க்கு‌ப் ‌பிறகு‌ம் தொட‌ர்‌‌ந்து ‌விரத‌த்தை அனுச‌ரி‌ப்பா‌ர்க‌ள். அ‌ப்படி‌த் தொட‌ர்‌ந்து போ‌ய் பெள‌ர்ண‌மி‌க்கு‌ப்‌ ‌பிறகு வரு‌ம் சது‌ர்‌த்‌தி ‌தின‌த்தோடு ‌விர‌த‌த்தை ‌நிறைவு செ‌ய்வா‌ர்க‌ள். இ‌த்தனை நா‌ள் ‌விரத‌த்து‌க்கு‌ப் ‌பிறகுதா‌ன் ‌பி‌ள்ளையாரை ‌கிண‌ற்‌றிலோ அ‌ல்லது ஏதாவது ‌நீ‌ர் ‌நிலை‌யிலோ கொ‌ண்டு போ‌ய் போடுவது வழ‌‌க்க‌ம். ப‌தினை‌ந்து நா‌ட்களுக்கு கடைபிடித்தாலும் ச‌ரி, ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தியன்று ஒரே ஒரு நா‌ள் ம‌ட்டு‌ம் அனுச‌ரி‌த்தாலு‌ம் ச‌ரி, நாம் மே‌ற்கொ‌ள்ளு‌ம் ‌விர‌த‌த்தை உள‌ப்பூ‌ர்வமாகக் கடை‌பிடி‌க்க வே‌ண்டும்.
 
வருட‌த்‌தி‌ற்கு ஒருமுறை ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி கொண்டாடப்படுவதுபோல, மாத‌ந்தோறு‌ம் பெள‌ர்ண‌மி‌க்கு அடு‌த்த சது‌ர்‌த்‌தி திதி ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தியாக அனு‌ஷ்டி‌க்க‌ப்படு‌கிறது. இ‌ந்த நா‌ளி‌ல் ‌விரத‌ம் இரு‌ப்பதும் வழ‌மையாகும். அ‌ன்றை‌க்கு முழுவது‌ம் விரதம் இரு‌ந்து, ‌விநாயக‌ர் ‌விக்கிரகம் அ‌ல்லது பட‌த்திற்கு மு‌ன்னா‌ல் ‌தீபமே‌ற்‌றி, நாள் முழுவதும் ‌விநாயக‌ர் பாட‌ல்க‌ள், ‌‌ஸ்தோ‌த்‌திர‌ங்‌களை பாடி, மாலை‌யி‌ல் கொழு‌க்க‌ட்டை படைத்து நைவே‌த்ய‌ம் செ‌ய்து, ‌பிறகு ச‌ந்‌திர த‌ரிசன‌ம் செ‌ய்து‌வி‌ட்டு எ‌ளிமையான உணவை எடு‌த்து‌க் கொ‌ண்டு ‌விர‌த‌த்தை முடி‌ப்பார்கள்.
 
‌விநாயக‌ர் சது‌ர்‌த்தி அ‌ல்லது ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தி அ‌ன்று ‌விரத‌ம் இரு‌ப்பதா‌ல் உ‌ள்ள‌ம் மே‌ன்மையடையு‌ம், உட‌ல் ஆரோ‌க்‌கிய‌ம் வளரு‌ம், எ‌ல்லா வள‌ங்களு‌ம் ‌நிறையு‌ம். ‌விரத‌ம் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ம‌ட்டும‌ல்ல, அவ‌ர்க‌ள் குடு‌ம்ப‌த்‌தினரு‌க்கு‌ம், அவ‌ர்களை சா‌ர்‌ந்த அனைவரு‌க்கு‌ம் ‌விநாயக‌ர் ந‌ல்லன ‌அனைத்தும் அரு‌ள்வா‌ர்.