ரயில்வே பட்ஜெட் எதிரொலி: பங்குச்சந்தையில் 150 புள்ளிகள் வீழ்ச்சி
ரயில்வே பட்ஜெட் எதிரொலியாக பங்குச்சந்தையில் 150 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
2015–16 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த ரயில்வே பட்ஜெட், நரேந்திர மோடி தலைமையிலான, பாஜக அரசின் முதல் முழுமையான ரயில்வே பட்ஜெட், மேலும் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட்டும் ஆகும்.
இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படாததாலும், புதிய அறிவிப்புகள் பெரிதளவில் ஏதும் இல்லாததால் பகல் 12.30 மணி அளவில் பங்குச்சந்தை இன்று 150 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.