வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 24 நவம்பர் 2018 (08:33 IST)

கடவுள் தான் கற்பழிக்க சொன்னார்: 9 பெண்களை சீரழித்த மதபோதகர்

தென்கொரியாவில் மதபோதகர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தென்கொரியாவில் மக்களிடையே பிரபலமானவர் தான் மதபோதகர் ஜேராக் லீ. இங்கு எப்படி நித்யானந்தாவோ அங்கு அவர் அப்படி.
 
இவனது முழு வேலையே கடவுளின் பெயரை சொல்லி அவனிடம் வரும் பெண்களை சீரழிப்பதுதான். கடவுள் தான் இப்படி செய்ய சொன்னார் என கூறி கிட்டதட்ட 9 பெண்களை இவன் கற்பழித்துள்ளான்.
 
இவனது கொடுமைகளை தாங்க முடியாத பெண் ஒருவர் இதுகுறித்து ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் முறையிட்டார். இதனையடுத்து போலீஸார் ஜேராக் லீயை கைது செய்தனர். இவனுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.