1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சுவை மிகுந்த புளியோதரைப் பொடி செய்வது எப்படி....?

தேவையான பொருட்கள்:
 
புளி - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
வேர்க்கடலை - 1 கப்
கடலை பருப்பு - 4 டீஸ்பூன்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
தனியாத் தூள் - 4 டீஸ்பூன்
மஞ்சள் - 1 (உடைத்துக் கொள்ளவும்)
கட்டிப் பொருங்காயம் - 1 சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
புளியை கடாயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறக்கவும். காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, வெந்தயம், தனியா தூள், மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக  சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு:
 
இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து 3 மாதம் வரை பயன்படுத்தலாம். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து இந்த புளியோதரைப் பொடி சேர்த்து சாதத்தில் போட்டு கலந்தால். உடனடி புளிசாதம் தயார்!
 
இந்தப் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து பொடி கரைசலை கொதிக்க வைத்தால், புளிக்காய்ச்சல் தயாராகிவிடும். மேலே வறுத்த வேர்க்காடலை சேர்த்தால் பார்ப்பதற்கு மட்டுமில்லாமல், சாப்பிட சுவையாகவும் இருக்கும்.