சிறுதானிய அடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்...
சிறுதானிய அடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்...
தேவையான பொருட்கள்:
கோதுமை - ஒரு கப்
அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - ஒரு கப்
பச்சைப்பயிறு - ஒரு கப்
கொண்டைக்கடலை - ஒரு கப்
மொச்சை - ஒரு கப்
எள்ளு - ஒரு கப்
உளுந்து - ஒரு கப்
கொள்ளு - ஒரு கப்
இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு அளவு மற்றும், காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 கீற்று, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
செய்முறை:
முந்தைய நாள் இரவே தானியங்களை ஊறவைக்கவும். மறுநாள் ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவில் உப்பு கலந்து தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். சுவையான தானிய அடை தயார். இவை எடை கூடுவதை தடுக்கும்.