செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (17:27 IST)

டாஸ்கில் ஆரவ் மற்றும் பிந்து மாதவியை கதறவிட்ட பிக்பாஸ் - ப்ரொமோ

நூறு நாட்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய இருக்கிறது. தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், கொடுக்கப்படும் டாஸ்க்குள் கடுமையானதாக உள்ளது. இதனால் போட்டியாளர்களும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் கடுமையாக போராடி வருகின்றனர்.

 
நேற்று பிக்பாஸ் வீட்டில் 'முடிஞ்சா உடைச்சுப் பாரு" என்ற டாஸ்க் கொடுக்கபட்டது. போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து, பலூன்களை ஊதி போர்டில் ஒட்ட வேண்டும் என்பதுதான் அது. டாஸ்க்கின்படி இதில் கணேஷை ஆரவ்வும்,  பிந்துமாதவியும் தடுக்கின்றனர். சிநேகனை சுஜாவும், ஹரிஷும் தடுக்கின்றனர். இந்த போட்டியில் கைகால்களை  உடைத்துக்கொள்ளும் அளவுக்கு மோசமாக விளையாடினார்கள்.
 
இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில் டாஸ்கின்படி பிந்து மாதவியின் முன்னால் சாப்பிடுவதற்கு எலுமிச்சம் பழம்,  பாகற்காய், பச்சை மிளகாய் கொண்டு வந்து வைக்கிறார் ஆரவ். அதனை ஒன்று விடாமல் சாப்பிட வேண்டும் என்பதுதான் டாஸ்க். அதனை பார்த்த பிந்து மாதவி அதிர்ச்சியில் கத்துகிறார். தொடர்ந்து ஒவ்வொன்றாக கத்திகொண்டே சாப்பிடவும்  செய்கிறார்.
 
இதனை தொடர்ந்து ஆரவ்க்கு கொடுக்கப்பட்ட டாஸ்கின்படி சிநேகன், ஆரவ்க்கு ஹார் ரிமூவ் செய்து விடுகிறார். இதனால் வலி  தாங்க முடியாமல் கத்துகிறார் ஆரவ். இறுதியில் போட்டியில் யார் வென்றார்கள் என்பது இன்று இரவு தெரியவரும்.