1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (13:39 IST)

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உத்தரவு வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறைடூடு செய்த வழக்கில் தற்போது நவோதயா பள்ளிகள் தொடங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடங்கப்பட்டது. கிராம புற மாணவர்கள் தரமான கல்வியை பெற நவோதயா பள்ளிகளுக்கு தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 
 
நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் கற்பிக்கப்படுகிறது. இதனால் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு சார்ப்பில் வாதிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் கற்பிக்கப்படும் என எழுத்துபூர்வமாக வழங்கப்பட்டதை அடுத்து நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
 
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்து. தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க தற்போது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.