வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 11 மார்ச் 2018 (18:18 IST)

தேனி காட்டுத் தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகள்!

போடி அருகே குரங்கணியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்ட 40 கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர்.

 
கடந்த 10 நாட்களுக்கு குரங்கணியில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. குரங்கணியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்ட 40 கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர். கல்லுரி மாணவிகளை மீட்க ஊர்மக்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை காவலர்கள் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
 
விரைவில் காட்டுத் தீயில் சிக்கியவர்கள் மீட்கப்படுவார்கள் வனத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 முதல் 9 பேர் மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. காட்டுத் தீயில் சிக்கியவர்கள் எண்ணிக்கை சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் போர்கால அடிப்படையில் விரைவில் காட்டுத் தீயில் சிக்கியவர்கள் மீட்கப்படுவார்கள் எனறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.