1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 ஜூலை 2018 (08:54 IST)

அரசுப் பள்ளியில் உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள நரேலா பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் நேற்று மதியம் உணவு வழங்கப்பட்டது. இதனை அந்த பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் சாப்பிட்டனர்.
 
உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தும் அவதிப்பட்டனர்.
 
இதனால் அதிர்ந்துபோன ஆசிரியர்கள் அந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தெரிவித்த மருத்துவர்கள் அவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதாவது விஷப்பூச்சி விழுந்திருக்கலாம் என தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் விசாரித்து வருகின்றனர்.