செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (13:01 IST)

நிபந்தனை அடிப்படையில் சென்னை ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை; அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கவுள்ளது. 
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த இந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோத உள்ளன.
 
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் உள்ளுர் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாடும். இந்த போட்டிகளை மைதானத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கவுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆகவும் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் தான் வழங்கப்படும்.  டிக்கெட்டுகளை இணையதளம் வாயிலாகவும், கவுண்ட்டர் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.